பல்லவி
பணமே உன்னாலென்ன குணமே - தண்டம்
பண்ணினேன் சற்றுமென் கண்ணின் முன்னில்லாதே
அனுபல்லவி
மணமில்லா மதமோகம் குரோதம் துன்மார்க்கமும்
மூர்க்கமும் யார்க்குமே போதிக்கும் - பணமே
சரணம்
தேடியுனை வைத்து மூடியவர்க்கு நீ
தீர்க்காயுசு தருவாயோ - இனி
நாடி யமன் வந்து சாடும்போது நீ
நானென்று முன் வருவாயோ
கூடிய பேர்கள் குடியைக் கெடுப்பாயே
கொல்லச்சொல்லி பின்னும் காட்டிக்கொடுப்பாயே
ஓடிஓடி அற்பரைப் போய் அடுப்பாயே
உத்தமரைக் கண்டால் ஓட்டமெடுப்பாயே
Hi Sanjay ji it's my pleasure to listen this beautiful song in your amazing voice. Where do you find this lyrics? Do you know the author of this lyrics.
ReplyDelete