Showing posts with label BAAGESHRI. Show all posts
Showing posts with label BAAGESHRI. Show all posts

Saturday, February 9, 2013

JAGAM PUGAZHUM PUNYA KATHAI - LAVA KUSA









 HINDOLAM, ARABHI, MOHANAM, SARAMATHI, BEGADA, HAMSANANDHI, SURUTI, SAHANA, BAAGESHRI, REETI GOWLAI, SINDHU BHAIRAVI, KAPI, NEELAMANI, BRINDAVANA SARANGA, NATAKURINJI, TILANG.

ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
உங்கள் செவிகுளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே..

இகபர சுகமெல்லாம் அடைந்திடலாமே
இந்த கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும்போதிலே (2)
இணையே இல்லாத காவியமாகும்..(ஜெகம் புகழும்)

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கெளசல்யா, கைகேயி, சுமித்திரை
கருவினிலே உருவானார் ராமர், லஷ்மணர்
கனிவுள்ள பரதன், சத்ருக்னர் நால்வர்..

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தாரே..
காட்டில் கெளசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலஷ்மணரை அனுப்பினனே
கண்மணி ராமலஷ்மணரை அனுப்பினனே..

தாடகை சுபாகுவை தரையில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே (2)
பாதையில் அகலிகை சாபத்தை தீர்த்தபின் (2)
சீர்பெறும் மிதிலை நகர் நாடி சென்றனரே..

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையை கன்னி மாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தனர்(2)
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்..

ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தை தன்னை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வனின் வீரத்தை கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையை கண்டான்...(ஜெகம் புகழும்)

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணி முடி சூட்டவே நாள் குறித்தானே(2)
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகரத் தோரணத்தால் அலங்கரித்தனரே..

மந்தரை போதனையால் மனம்மாறி கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்காண்டுகள் வாழவும்
மன்னனிடம் வரமதைக் கேட்டாள்..

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தை உன்னை வனம் போக சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தை தந்தார் என்றாள்..

சஞ்சலமில்லாமல் அஞ்சன வண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கி சென்றான்
மிஞ்சிய கோபத்தால் வெகுண்டே விலெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினார்..

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுரி தரித்து ராமன் செல்வதைக் கண்டு (2)
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
உடன் எனப் போவதென்று தடுத்தனர் சென்று..

ஆறுதல் கூறியே கார்முகில் வந்தான்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்னதற்காகவே
அன்னலும் கானகத்தை நாடிச் சென்றானே...(ஜெகம் புகழும்)

கங்கைக் கரைஅதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான் (2)
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்(2)
அஞ்சக வண்ணன் அங்கு சென்று தங்கினான் (2)

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள் (2)
கோபம் கொண்ட இளையோன்
குரும்பால் அவளை மானபங்கம் செய்து விரட்டி விட்டன்..

தங்கையின் போதனையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்..(2)
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச் சென்றான்..

வழியிலே ஜடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் ஹனுமனின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டி இலங்கை சென்ற ஹனுமான்
அன்னையை அசோக வனத்தில் கண்டான்..

"ராம சாமியின் தூதன் நானடா ராவணா" என்றான்
ஹனுமார் லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
"கண்டேன் அன்னையை" என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து அய்யன் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்..

விபீஷணனின் நட்பைக் கொண்டான்
விபீஷணனின் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியை தீக்குளிக்க செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டார்(2)
மக்கள் பலரும் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்...(ஜெகம் புகழும்)

Sunday, July 15, 2012

KANNAN MANA NILAIYAI THANGAME THANGAM - DEIVATHIN DEIVAM























கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் 
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் 
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் 
பின்னர் ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம் 

ஆற்றங் கரையதனில் முன்னமொரு நாள் எனை 
அழைத்து தனியிடத்தில் பேசியதெல்லாம் 
தூற்றி நகர்முரசு சாற்றுவேனென்று 
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம் 

நேரமுழுதினும் அப் பாவி தன்னையே 
உள்ளம் நினைந்து மருகதடி தங்கமே தங்கம் 
தீர ஒரு சொல்லின்று கேட்டு வந்திட்டால் பின்பு 
தெய்வம் இருக்கதடி தங்கமே தங்கம் 

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் 
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் 

Wednesday, October 19, 2011

THEN ARUVIYIL NANAINDHIDUM MALARO - AGAYA GANGAI


SUDDHA DHANYASI, BAGESHRI

(M) dheem...
(F) hmm...
(M) dhiranana...
(F) hmm... hmm... hmm... hmm...

(F) dheem dhiranana dhirana dheerananaa
(M) thaen aruviyil nanaindhidum malarO
(F) dhiranaa... dhiranaa...
(M) thodarum... kadhaiyo...
(F) dhiranaa... dhiranaa...
(M) edhudhaan... vidaiyO...
mana vee...Nai... naan isaiththida
thaen aruviyil nanaindhidum malarO

(M) muga vaasal meedhu dheebam
iru kaNgaL aanadhO oh...
(F) mmm... mmm... aah...
(M) muga vaasal meedhu dheebam
iru kaNgaL aanadhO
mana vaasal kOlamae dhinam pOdudhO
(F) aah... aah...
(M) thuNaiyaagum dhaeviyai kodi thaedudhO
(F) aah... aah...
(M) punnagaiyO... poo mazhaiyO...
un nadaiyO... thaer padaiyo
varamO varumO naan vaLam peRa

(F) dheem dhiranana dhirana dheerananaa
(M) thaen aruviyil nanaindhidum malarO
(F) dhiranaa... dhiranaa...
(M) dhiranaa... dhiranaa...
(F) dhiranaa naa naa dhiranana
dheem dhiranana dhirana dheem dhiranaa


(M) naaLum ovvoru naadagamO
edhu maedaiyO...
(F) aah... aah... aah... aah...
(M) naaLum ovvoru naadagamO
edhu maedaiyO...
inimai vizhi naattiyamO
ennai aattumO
aen tholaivO... nee nilavO...
(F) aah... aah... aah... aah...
thanimai kodumai enadhuyir azhaiththida

(F) dheem dhiranana... dhiranana
thaen aruviyil nanaindhidum malarO
thodarum... kadhaiyO...
edhudhaan... vidaiyO...
mana vee...Nai... naan isaiththida
thaen aruviyil nanaindhidum malarO

Udhaya writes:

Mu.Mehtha had penned excellent lyrics for the song as well. Mu.Metha had complimented IR for suggesting a correction in the song. Metha initially wrote a line ending,"...nee nilavo aen tholaivo". IR suggested that the song be rewritten as "...aen tholaivo, nee nilavo" which still conveys the same message but there is an added layer of meaning since the revised lines allude to the fact that "her distance from him may be because she is the moon".

Thursday, November 26, 2009

KANNAN MANA NILAYAI - DEIVATHIN DEIVAM






கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் 
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் 
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் 
பின்னர் ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம் 

ஆற்றங் கரையதனில் முன்னமொரு நாள் எனை 
அழைத்து தனியிடத்தில் பேசியதெல்லாம் 
தூற்றி நகர்முரசு சாற்றுவேனென்று 
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம் 

நேரமுழுதினும் அப் பாவி தன்னையே 
உள்ளம் நினைந்து மருகதடி தங்கமே தங்கம் 
தீர ஒரு சொல்லின்று கேட்டு வந்திட்டால் பின்பு 
தெய்வம் இருக்கதடி தங்கமே தங்கம் 

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் 
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் 

Wednesday, November 18, 2009

Karpagavalli Nin PorpathangaL Pidithen - TMS




karpaga valli nin 
raagam: raagamaalika 
taaLam: aadi
Composer: Yazhpaanam N. Veeramani Iyer
Language: Tamil

pallavi aananda bhairavi

20 naTabhairavi janya

Aa: S G2 R2 G2 M1 P D2 P N2 S
Av: S N2 D2 P M1 G2 R2 S


karpagavalli nin porpadhangal pidiththaen
nargadhi arulvaayammaa dhaevi
(karpagavalli)
parppalarum poatrum padhi mayilaapuriyil
sirpam niraindha uyar singaarak koayil konda
(karpagavalli)
1
neeyindha vaelaithanil saeyan enai marandhaal
naanindha naanilaththil naadudhal yaaridamoa?
aenindha mounam ammaa aezhai enakkarula?
aanandha bhairaviyae aadhariththaalum ammaa
(karpagavalli)

65 mEcakalyaaNi mEla
Aa: S R2 G3 M2 P D2 N3 S
Av: S N3 D2 P M2 G3 R2 S


elloarkkum inbangal ezhilaay irainji enrum
nallaatchi seydhidum naayagiyae nithya
kalyaaniyae kabaali kaadhal puriyum andha
ullaasiyae umaa unai nambinaenammaa
(karpagavalli)

22 karaharapriya janya
Aa: S G2 M1 D2 N2 S
Av: S N2 D2 M1 P D2 G2 M1 R2 S


naagaesvari neeyae nambidum enaikkaappaai
vaageesvari maayae vaaraai idhu tharunam
baagaesree thaayae paarvathiyae indha
loagaesvari neeyae ulaginil thunaiyammaa
(karpagavalli)
59 dharmaavati janya
Aa: S R2 G2 M2 D2 S
Av: S N3 D2 M2 G2 S R2 G2 S
anjana maiyidum ambikae embiraan
konjikkulaavidum vanjiyae ninnidam
thanjamena adaindhaen thaayae un saey naan
ranjaniyae rakshippaai kenjugiraenammaa
(karpagavalli)

http://www.karnatik.com/c2629.shtml

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
இயற்றியவர் : யாழ்ப்பாணம் இணுவில் வீரமணி ஐயர்
பாடியவர் : டி. எம். சௌந்தரராஜன்
ராகம் : ஆனந்த பைரவி கல்யாணி பாகேஸ்ரீ ரஞ்சனி

(ஆனந்த பைரவி)

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா



நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?
ஏனிந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள?
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா

(கல்யாணி)
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாட்சி வைத்திடும்  நாயகியே
நித்ய கல்யாணியே...
கல்யாணியே கபாலி காதல் புரியும்
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா


கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா

(பாகேஸ்ரீ)
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்

பாகேஸ்ரீ தாயே
பாகேஸ்ரீ தாயே பார்வதியே
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா

(ரஞ்சனி)
அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சமென அடைந்தேன்...
தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா