Thursday, September 22, 2016

VELLAI KAMALATHILE - GOWRI KALYANAM



சரஸ்வதி வணக்கம் - SUBRAMANIYA BHARATHI


வெள்ளைக் கமலத்திலே -- அவள்
வீற்றிருப் பாள், புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான் -- நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,

பு{[மு-ப.]: மாய்ப்பதுவாய்ப் -- பவந்}

கள்ளைக் கடலமு தை -- நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத்திலே -- எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள்.


வேதத் திருவிழி யாள், -- அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதி யே -- நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்கமெனுஞ் -- செவி
வாய்ந்தநற் றுணிவெனுந் தோடணிந் தாள்,
போதமென் நாசியி னாள், -- நலம்
பொங்குபல் சாத்திர வாயுடை யாள்.


கற்பனைத் தேனித ழாள், -- சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,
சிற்ப முதற்கலை கள் -- பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,
சொற்படு நயமறி வார் -- இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்
விற்பனத் தமிழ்ப்புல வோர் -- அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்:


வாணியைச் சரண்புகுந் தேன்; -- அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;
பேணிய பெருந்தவத் தாள், -- நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,
பூணியல் மார்பகத் தாள், -- ஐவர்
பூவை, திரௌபதி புகழ்க்கதையை
மாணியல் தமிழ்ப்பாட்டால் -- நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே.

[குறிப்பு]: ‘வேதத் திருவிழியாள்’ எனத் தொடங்கும் பாடல்
கையெழுத்துப் பிரதியில் அடிக்கப்பட்டுள்ளதாகக்
கவிமணி குறித்துள்ளார்.


பு{[மு-ப.]: ‘சீதக் கதிர் மதியா -- நுதல்’
‘சேர்ந்த தோரூகவண் குழலுடையாள்’
‘வாக் குத வுவளெனத் திட மிகுந்தேன்’}
முதலாவது-அழைப்புச் சருக்கம்



http://newdhool.blogspot.in/2016/09/vellai-kamalathile-gowri-kalyanam.html