Sunday, April 5, 2020

KANNUKUL POTHI VAIPPEN - THIRUMANAM ENUM NIKKAH



படம்: திருமணம் எனும் நிக்காஹ்
வரிகள்: பார்வதி

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக்  கண்ணனே வா
தி தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷமக்  கண்ணனே வாடா வா

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தி தித்த தை ஜாதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புரம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா
விசம கண்ணனே வாடா வா

சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர

மழைத்தறியா உள்ளம்
பிசுபிசுப்பை பேண
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பை காண

நீ ராதை இனம்
சொல்லாமல் சொன்னாயே

செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாயே
உன்னாலே யோசிக்கிறேன்

உன் விரலை பிடித்து
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக்  கண்ணனே வா
தி தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷமக்  கண்ணனே வாடா வா


உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித்தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்

கண்ணாடி முனை போல் எண்ணங்கள் கூராய்
முன் இல்லாததை போல் எல்லாமே வேறாய்
உன்னாலே பூரிக்கிறேன்

உன் சிரிப்பு சரத்தில்
மகிழ மரத்தில்
பூ தைக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக்  கண்ணனே வா
தி தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷமக்  கண்ணனே வாடா வா