Showing posts with label HAMEER KALYANI. Show all posts
Showing posts with label HAMEER KALYANI. Show all posts

Sunday, April 5, 2020

KANNUKUL POTHI VAIPPEN - THIRUMANAM ENUM NIKKAH



படம்: திருமணம் எனும் நிக்காஹ்
வரிகள்: பார்வதி

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக்  கண்ணனே வா
தி தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷமக்  கண்ணனே வாடா வா

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தி தித்த தை ஜாதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புரம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா
விசம கண்ணனே வாடா வா

சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர

மழைத்தறியா உள்ளம்
பிசுபிசுப்பை பேண
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பை காண

நீ ராதை இனம்
சொல்லாமல் சொன்னாயே

செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாயே
உன்னாலே யோசிக்கிறேன்

உன் விரலை பிடித்து
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக்  கண்ணனே வா
தி தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷமக்  கண்ணனே வாடா வா


உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித்தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்

கண்ணாடி முனை போல் எண்ணங்கள் கூராய்
முன் இல்லாததை போல் எல்லாமே வேறாய்
உன்னாலே பூரிக்கிறேன்

உன் சிரிப்பு சரத்தில்
மகிழ மரத்தில்
பூ தைக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக்  கண்ணனே வா
தி தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷமக்  கண்ணனே வாடா வா

Thursday, September 22, 2016

VELLAI KAMALATHILE - GOWRI KALYANAM



சரஸ்வதி வணக்கம் - SUBRAMANIYA BHARATHI


வெள்ளைக் கமலத்திலே -- அவள்
வீற்றிருப் பாள், புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான் -- நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,

பு{[மு-ப.]: மாய்ப்பதுவாய்ப் -- பவந்}

கள்ளைக் கடலமு தை -- நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத்திலே -- எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள்.


வேதத் திருவிழி யாள், -- அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதி யே -- நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்கமெனுஞ் -- செவி
வாய்ந்தநற் றுணிவெனுந் தோடணிந் தாள்,
போதமென் நாசியி னாள், -- நலம்
பொங்குபல் சாத்திர வாயுடை யாள்.


கற்பனைத் தேனித ழாள், -- சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,
சிற்ப முதற்கலை கள் -- பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,
சொற்படு நயமறி வார் -- இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்
விற்பனத் தமிழ்ப்புல வோர் -- அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்:


வாணியைச் சரண்புகுந் தேன்; -- அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;
பேணிய பெருந்தவத் தாள், -- நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,
பூணியல் மார்பகத் தாள், -- ஐவர்
பூவை, திரௌபதி புகழ்க்கதையை
மாணியல் தமிழ்ப்பாட்டால் -- நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே.

[குறிப்பு]: ‘வேதத் திருவிழியாள்’ எனத் தொடங்கும் பாடல்
கையெழுத்துப் பிரதியில் அடிக்கப்பட்டுள்ளதாகக்
கவிமணி குறித்துள்ளார்.


பு{[மு-ப.]: ‘சீதக் கதிர் மதியா -- நுதல்’
‘சேர்ந்த தோரூகவண் குழலுடையாள்’
‘வாக் குத வுவளெனத் திட மிகுந்தேன்’}
முதலாவது-அழைப்புச் சருக்கம்



http://newdhool.blogspot.in/2016/09/vellai-kamalathile-gowri-kalyanam.html

Monday, November 30, 2009

EN UYIR THOZHI - KARNAN



 என்னுயிர்த் தோழி கேளொரு சேதி
 இதுதானோ உங்கள் மன்னவன் நீதி

 தன்னுயிர் போலே மண்ணுயிர் காப்பான்
 தலைவன் என்றாயே தோழி

 அரண்மனை அறிவான் அரியணை அறிவான்
 அந்தபுரம் ஒன்று இருப்பதை அறியான் 
வருகின்ற வழக்கை தீர்த்து முடிப்பான்
 மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்

 என்னுயிர்த் தோழி கேளொரு சேதி
 இதுதானோ உங்கள் மன்னவன் நீதி

 இன்றேனும் அவன் எனை நினைவானோ
 இளமையை காக்க துணை வருவானோ
 நன்று ! தோழி நீ தூது செல்வாயோ 
நங்கையின் துயர சேதி சொல்வாயோ

 என்னுயிர்த் தோழி கேளொரு சேதி
 இதுதானோ உங்கள் மன்னவன் நீதி

 படம் : கர்ணன்
 இசை : விசுவனாதன் ராமமூர்த்தி
 பாடல் : கண்ணதாசன்

 ennuyir thozhi keloru seidhi
 idhu dhaano ungal mannavan needhi 
thannuyir pole mannuyir kaappaan
thalaivan enraayae thozhi

 aranmanai arivaan ariyanai arivaan aaaaaaaaaaaaaaaaaaa
aranmanai arivaan ariyanai arivaan
anthap puramonru iruppadhai ariyaan
varuginra vazhakkai theerththu mudippaan
 manaiviyin vazhakkai manadhilum ninaiyaan

 ennuyir thozhi keloru seidhi
idhu dhaano ungal mannavan needhi

 inrenum avan enai ninaivaano
ilamaiyaik kaakka thunai varuvaano
nanru thozhi nee thoodhu selvaayo
nangkaiyin thuyara seidhi solvaayo

ennuyir thozhi keloru seidhi
idhu dhaano ungal mannavan needhi