Sunday, July 15, 2012

KANNAN MANA NILAIYAI THANGAME THANGAM - DEIVATHIN DEIVAM























கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் 
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் 
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் 
பின்னர் ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம் 

ஆற்றங் கரையதனில் முன்னமொரு நாள் எனை 
அழைத்து தனியிடத்தில் பேசியதெல்லாம் 
தூற்றி நகர்முரசு சாற்றுவேனென்று 
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம் 

நேரமுழுதினும் அப் பாவி தன்னையே 
உள்ளம் நினைந்து மருகதடி தங்கமே தங்கம் 
தீர ஒரு சொல்லின்று கேட்டு வந்திட்டால் பின்பு 
தெய்வம் இருக்கதடி தங்கமே தங்கம் 

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் 
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் 

No comments: