Thursday, September 6, 2012

SADHA SADHA UNNAI - RAMANA MALAI



SONG STARTS @15:50

சதா சதா உன்னை நினைந்து நினைந்து
உன்னில் கலந்திடவே அருள்வாய் ரமணா 
சதா சலித்துச்சளைத்த மனதினிலே
சதாசிவா என்றுனை  ஓர் நொடிப்பொழுதும் இடைவிடாது 

சதா சதா உன்னை நினைந்து நினைந்து
உன்னில் கலந்திடவே அருள்வாய் ரமணா 

காம க்ரோத மத மாச்சரியமும் 
என்னை விட்டு விலகிடவும்
சாம கான திருவாசகம் 
என் நாவில் துலங்கிடவும் 
நின் திருமலர்ப் பதம் 
என் சிரமதில் திகழ்ந்திட 
குருவருள் துணைவர
திருவருள் தனைப்பெற 

சதா சதா உன்னை நினைந்து நினைந்து
உன்னில் கலந்திடவே அருள்வாய் ரமணா 

அதா இதா எனச்சென்றது எத்தனை ஆலயங்கள்
இதா அதா  எனச்சொன்னது எத்தனை மந்திரங்கள் 
ஆழியின் அலை போல அலைதனில் நுரை போல
அலைந்து அலைந்து மனம் கலைந்து குலைந்து
நிலை கலங்கி தினம் தவிக்குதே 

தொலைவினில் தெரிந்திடும் கலங்கரை விளக்கே 
அருகினில் ஒளி வீசு நீ இருக்கும் கரை சேர 

சதா சதா உன்னை நினைந்து நினைந்து
உன்னில் கலந்திடவே அருள்வாய் ரமணா 
சதா சலித்துச்சளைத்த மனதினிலே
சதாசிவா என்றுனை  ஓர் நொடிப்பொழுதும் இடைவிடாது

No comments: